Monday, April 23, 2018

000039. குடிபோதையில் செய்த தவறுக்கு தண்டனை உண்டா?

தன் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது மற்றவரின் சூழ்ச்சியாலோ பலவந்தமாக குடிபோதையூட்டப்பெற்றவர்கள், அக்குடிபோதையின் காரணமாக, தான் செய்யும் செயலின் தன்மையையும் தரத்தையும் அறியும் திறனற்ற நிலையில் செய்யும் செயல்களுக்கு தான் சட்டம் குற்றப்பொறுப்பிலிருந்து விலக்களிக்கிறது. 
[இந்திய தண்டனைச் சட்டம் section 85]





மற்றபடி மது குடித்து மதிமயங்கிப் புரியும் குற்றச்செயல்களை சட்டம் மன்னிப்பதில்லை. அதற்கு மது அருந்தியவர் பொறுப்பகின்றார். அவருக்கு குடிபோதை ஏற்படுத்தாமலிருந்தால் எந்த அறிவை அவர் பெற்றிருந்திருப்பாரோ அதே அறிவை அவர் பெற்றிருந்தாற் போன்றே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அவர் உள்ளாவார். 
[ இந்திய தண்டனைச் சட்டம் section 86]

No comments:

Post a Comment