Sunday, May 20, 2018

000047. U. D. R - பட்டா என்றால் என்ன?

யூ. டி. ஆர் பட்டா ஆங்கிலத்தில் - Updating Registry Scheme என்று அழைக்கப்படுகிறது. தமிழில் "நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்" ஆகும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்  01.06.1979 - ல் துவக்கப்பட்டது  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள மாசார்பட்டியில் முதன்முறையாக செயல்பட ஆரம்பித்தது. இந்தமுதல் முயற்சிக்கு பிறகு மெல்ல தமிழகம் முழுவதும் 30.4.1987 வரை நில உடைமையில் பல மாற்றங்கள் நடந்தன.

உலகம் தோன்றியது முதல் நிலங்கள் இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் நிலங்கள்அனைத்தும் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு நிலங்கள் மக்களுக்கு சொந்தமாச்சு. இந்த நிலங்களை அரசு 30 வருடங்களுக்கு ஒருமுறை வரையறை செய்ய வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் அரசு ஆள் பற்றாக்குறையை காரணமாக காட்டி நிலங்களை ஆய்வு செய்யாமல் இருந்தது. அதன் பிறகே 1979 ம் ஆண்டு இந்த யூ. டி. ஆர் பட்டா திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக  சென்று விசாரணை நடத்தி "இன்னார் நிலம்" என வரையறை செய்து பட்டா வழங்கினார்கள். அதற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள், நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என அனைவருக்கும் இந்த யூ. டி. ஆர் திட்டத்தை பற்றி நில அளவையர் விளக்கம் கொடுப்பார். இந்த திட்டத்தின்படி பட்டாவை அவரவர்  வீட்டுக்கு சென்று அதிகாரிகள் வழங்கினார்கள். இந்த பட்டாக்கள் உடன் தோராய வரைபடமும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே கூட்டுப்பட்டாக்களாக இல்லாமல் தனிநபர் பட்டாவாக மாற்றப்பட்டது தான். பட்டா புத்தகத்தில் புகைப்படம் ஒட்டப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டது. நிறைய  நில உரிமையாளர்களின் பெயர்கள் விடுபட்டு போனது. பெயர்கள் மாற்றி எழுதப்பட்டது. நிறைய உரிமையாளர் பெயர்கள் எழுதாமலே விடப்பட்டது. கோவில் நிலங்களும் தவறாக பட்டா போடப்பட்டது.

மொத்தத்தில் யூ. டி. ஆர் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டது என்று கூறலாம்

No comments:

Post a Comment