Friday, May 4, 2018

000044. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016., சென்னை உயர்நீதிமன்றம், 

தமிழ்நாட்டிற்கு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டம் 2(a) ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

2(a) - " துன்பம் விளைவித்தல் " என்றால் பழி தூற்றுவது அல்லது ஊறு செய்வது அல்லது தொந்தரவு செய்வது அல்லது தாக்குவது அல்லது வலிமையை பயன்படுத்துவது உள்ளடங்கலான அச்சுறுத்தலை, அச்சத்தை, அவமானத்தை அல்லது தடுமாற்றத்தை விளைவிக்கிற அல்லது பெரும்பாலும் விளைவிக்ககூடிய ஓர் ஆடவரின் பண்பற்ற நடத்தை அல்லது செயல் என்று பொருள்படும்.

மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி துன்புறுத்தல் அல்லது பண்பற்ற செயல் ஒன்றை ஓர் ஆண் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.

எனவே ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016

Pradeep and One another Vs Inspector of police, K2 Police Station, Ayanavaram, Chennai and One another

(2016-2-LW-CRL-640)

இந்த தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தீர்ப்பான "பஷீர் அகமது மற்றும் பலர் Vs ஆய்வாளர் (2006-1-LW-CRL-393),(2006-4-CTC-374)" என்ற வழக்கும் சுட்டிக்காட்டப்பட்டது

No comments:

Post a Comment