Wednesday, April 11, 2018

000007. ✍ ஜாமீன் கையெழுத்து போடுகிறீர்களா? இதனால் வரும் பிரச்சனைகள் என்ன?

 எச்சரிக்கை ..⚠

கடன் என்று யார் முன்னாலும் கைகட்டி நிற்காமல் கம்பீரமாக வாழும் மனிதர்கள் கூட சில நேரங்களில், நண்பருக்காக போட்ட ஜாமீன் கையெழுத்தால் தலை குனிந்து நிற்கக்கூடிய சூழ்நிலை வந்துவிடுகிறது .

பெரும்பாலும் சிக்கல் வருவது வங்கிகளில் வாங்கும் கடனுக்கு ஜாமீன் போடும்போதுதான்! ஜாமீன் கேட்கப்படுவதே, ஒருவேளை கடன் வாங்கியவர் அதைத் திரும்பச் செலுத்தாவிட்டால் வசூலிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதால்தான். அதனால்தான் கடனை மீட்பதற்குத் தகுதி உள்ள ஆளைத்தான் ஜாமீன்தாரராக கடன் வழங்குபவர்கள் கேட்கிறார்கள்.


வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில்தான் பிரச்னை உருவாகிறது. அப்போது வங்கி, கடனாளியின் சொத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படுகிறது. அப்படி அவரிடம் சொத்து இல்லை என்கிறபோது, ஜாமீன் போட்டவர்தான் கையெழுத்திட்ட கடன் தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


மற்றொருவரின் வியாபாரக் கடனுக்காக ஒருவர் ஜாமீன் போட்டிருந்தால் யாருக்கு அதிக பொறுப்பு?

கடன் தொகைக்கு இருவருக்கும் சமமான பொறுப்பு உண்டு. கடன் செலுத்தப்படாவிட்டால், சர்ஃபேஸி (Sarfaesi) சட்டத்தின் மூலம் பிணையாகக் காட்டப்பட்ட சொத்தை பொது ஏலத்தின் மூலம் விற்க வாய்ப்பு உள்ளது.


ஜாமீன் கையெழுத்துப் போடுவதே தவறான செயலா..?

பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் ஒரு முறைதான் ஜாமீன் என்பது. ஆனால், யாருக்கு ஜாமீன் போட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். கடனாளி கடனைக் கட்டாத சூழ்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஜாமீன் போட்டவரும் ஆளாக வேண்டியிருக்கும்.


ஜாமீன் கையெழுத்து பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

கடனாளியிடம் இருந்து கடனை வசூலிக்கவோ அவருடைய சொத்துக்களை ஜப்தி செய்யவோ வழியே இல்லாத நிலையில், முதல்படியாக கடனை அடைக்குமாறு ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அப்போது ஜாமீன்தாரர் கடனை அடைக்க முன்வரவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். அப்போது கடன் மற்றும் வட்டியை ஜாமீன்தாரர் கொடுக்க வேண்டிவரும். கொடுக்கத் தவறினால், அவரது அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், அவரது மாதச்சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டி வரும். அதுவும் போதவில்லை என்றால், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்

000006. லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி...?

ஓர் விழிப்புணர்வு....!!!

====================
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்
   அ.சா.அலாவுதீன்
====================

I) ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் "Directorate of Vigilance and Anti-Corruption" என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இறுப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

II) லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- "PUBLIC SERVANTS" என்ற வரையறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்து போர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளார்கள்.

III)லஞ்சத்தில் நான்கு வகைகள் உண்டு.

 அவை பின்வருமாறு

(a) Demanding bribe from any individual, either to do any official act, or to do any service or disservice to any one

(b) Mega Level-Organised Corruption, by colluding with each other, viz. the whole team of officials right from bottom to top, the contractors and the middle men, would be colluded with each other. In this type of corruption, the Public/Govt money alone will be siphoned

(c) Minor Level-Organised Corruption, wherein the enforcing officials in the field and the organised criminals in the same area, would collude with each other for sharing the ill-gotten money.

(Example- The Corrupt Officials would collude with the Prohibition Offenders, Gamblers, Brothel-house-runners, Smugglers and other anti social elements in their jurisdictions for ill-gotten money)

(d) Petty corruption ( Mostly practiced by Corruptive Traffic Police men with the road side vendors and the Last grade servants, almost in all the Government offices, wherein only a meager amount of Rupees, viz. Rs- 100/ to 500/ are involved)

IV)இந்த நான்கு வகையில், 1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள்தான் அடிக்கடி “பொறி வைப்பு” நடவடிக்கையில் சிக்குவார்கள்.ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் அத்தி பூத்தார் போல சில நேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும். இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர் போன்றது. ஏனெனில், இதன் பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத் தெரியாது
ஆனால், நாளடைவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.

3-வது வகையான லஞ்சத்தில்தான், சமூகம் சீரழிவது கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல.

4-வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத் தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடை நிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத் தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும். 4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சை எடுப்பது போலத்தான்.

V) அதே போல, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும், மூன்று வகைகள் உண்டு.

1) Trap Case. ( பொறி வைத்துப்பிடித்தல் )

2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports.

3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. )

எப்படி புகார் அளிப்பது:

VI) இதில், லஞ்சம் கொடுத்தால் தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல்படுவார்கள். பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

VII) 2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள்தான் வெளிக்கொண்டுவரவேண்டும். இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்குஎதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத்தேவைப்படுகின்ற Detailled Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்றஅரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Colludeஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக் கொடுக்கும் Middle men மற்றும் சமூகவிரோதக்குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய விபரங்களை,  புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ,சென்னையில் இதனடியில் கூறிஉள்ள அதிகாரிகளுக்கு அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கைகு வரும்.

VIII)ஆனால், இந்த வகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப்பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.

IX)விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
Email: parsec@tn.gov.in

2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028. Phone-044-22321090/22321085/22310989/
22342142
E-mail: dvac@nic.in

X) மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct)
044-28272358(General)
044-28232755 (FAX) hozchn[at]cbi[dot]gov[dot]in 09444446240 
State of Tamil Nadu, Kerala & Pondicherry.

000005. விபத்து நிவாரணத் திட்டம்

▪தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட பல்வேறு திட்டங்களை வெவ்வேறு கால கட்டங்களில் அமலாக்கம் செய்து வந்தது. பின்னர் மேற்குறித்த அரசு ஆணைகளின்படியான எல்லா நிவாரண திட்டங்களையும் ஒருங்கிணைத்து அரசாணை நிலை எண் 471 நிதி (முதலமைச்சர் பொது நிவாரணம் மற்றும் நிதித்துறை நாள்:23.5.89ல் விபத்து நிவாரணம் வழங்கிட ஒருங்கிணைந்த ஒரு திட்டமாக “விபத்து நிவாரண திட்டம்”என்ற திட்டத்தினை அரசு அறிவித்தது.

            இந்த விபத்து நிவாரண திட்டத்தின்படி ஒரு தொழிலாளி அவர் தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அத்தொழில் சார்ந்த இதர பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ விபத்துக்குள்ளாகி இறந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ கீழ்க்கண்டவாறு நிவாரண உதவித்தொகை வழங்கிடலாம். (அரசாணை நலை எண் 570 வருவாய் (என்.சி.1) துறை நாள்:27.10.1999)

1)            இறப்பு     ரூ.15,000/-

2)            தோலுக்கு கீழே இரண்டு கையும் இழப்பு     ரூ.15,000/-

3)            இடுப்பு அளவில் இரண்டு கால்களையும் இழத்தல்  ரூ.15,000/-

4)          இரண்டு கால்களும் / இரண்டு கைகளும் செயல்படாதிருத்தல்  ரூ.15,000/-

5)            இரண்டு கண்களையும் இழத்தல் ரூ.15,000/-

6)            ஒரு காலும் ஒரு கையும் முற்றிலும் செயல் இழந்தோருக்கு   ரூ.15,000/-

7)    தோள்பட்டைக்கு கீழே மணிக்கட்டிற்கு மேலே கையை இழத்தல்     ரூ.10,000/-

8)            இடுப்புக்கு கீழே கணுக்காலுக்கு மேல் கால்களை இழத்தல்     ரூ.10,000/-

9)              ஒரு கண்  இழப்பு ரூ.10,000/-

10)            மணிக்கட்டு அளவில் கை அல்லது கைகளை இழத்தல்  ரூ.7500/-

11)            கணுக்கால் பாதம் அல்லது பாதங்களை இழத்தல்   ரூ.7500/-

12)    ஒரு கால் அல்லது ஒரு கை முழுவதுமாக செயல்படாதிருத்தல்     ரூ.7500/-



  இத்திட்டத்தின் கீழே நிவாரணம் பெற தகுதியுடைய தொழிலாளர்கள் விவரம்: (44 இனங்கள்) அரசாணை எண்.471, நிதித்துறை, நாள் 23.5.1989- இல் உள்ளபடி கீழ்க்கண்ட 44 வகை ஏழை தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம் செயல்படுத்திடலாம்.

1. சலவைத் தொழிலாளி

2. காலணித் தொழிலாளி

3. தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்

4. விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்

5. கருமார், சுத்தியல் கருமார்

6. பொன் வேலை செய்வோர், வெள்ளி வேலை செய்வோர்

7. கூடை முடைவோர்

8. கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிட தொழிலாளி

9. ஓடு தொழிலாளர்கள்

10. செங்கல் அடுக்குவோர்கள்

11. கிணறு தோண்டுவோர்கள்

12. கிணறு கட்டுவோர்கள்

13. வேளாண்மைத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் (2.5 ஏக்கருக்கு குறைவாக நிலமுன்ளோர்)

14. பதனீர் இறக்குவோர்

15. கழிவுநீர் அகற்றும் தொழிலாளிகள் 

16. பூச்சி மருந்து தெளிப்பவர்கள்

17. பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்

18. மீனவர்கள் (கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக அல்லாதவர்)

19. கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள்

20. டிரக் ஒட்டுபவர்கள்

21. ஆட்டோ, ரிக்ஷா ஒட்டுனர்கள்

22. தனியார் கார், வாடகை கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்
( வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்)

23. முடி திருத்துபவர்

24. கை வண்டி இழுப்போர்

25. மிதி வண்டி ஒட்டுநர்

26. தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்

27. மண்பாண்டம், மற்றும் மண்பொம்மைகள் செய்யும் குயவர், குலாளர் மற்றும் வேளாளர் 

28. வீடுகளில் பணிபுரிவோர்

29. பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோர்

30. சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்

31. தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்

32. லாரிகளில் பாரம் ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள் 

33. ஏழைத் தையல் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது

34. வெள்ளை அடிப்போர், வண்ணம் பூசுபவர் மற்றும் மின் வினைஞர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது

35. கிராமிய நடனக் கலைஞர்கள்

36. சமையல் தொழில் செய்பவர்கள்

37. மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

38. தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துனர்கள்

39. பந்தல் மேடை, மண்டபம் மாநாடு, திருமணப்பந்தல்,uu அலங்காரவளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஒளி,ஒலி அமைக்கும் தொழிலாளர்கள்.

40. மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம், கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருட்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் (கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர் மட்டும்.)

41. தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள் 

42. பிளம்பர்

43. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்

44. முழுநேர ஒவியர்கள்

விபத்து குறித்தான விளக்கம்:

1.விபத்து என்பது இறப்பு அல்லது முற்றிலும் நேரிடை வெளித்தாக்குதலினால் ஏற்படும் நிகழ்வின் விளைவாக பார்வைக்கு புலப்படும் எந்த ஒரு உடற் காயம் என்றும் பொருள்படும்.

2.மது போதை, அணுக்கதிர் வீச்சு, யுத்தம் இயற்கை சீற்றங்கள், வாகன விபத்து, கலகங்களினால் ஏற்படும் விபத்து நீங்கலாக ஏனைய விபத்துகளில் ஏற்படும் மரணம் அல்லது இடல் ஊனம் விபத்து எனக் கருதப்படும்.

3.மது அல்லது மருந்துU அருந்தி சித்தம் கலங்கிய நிலையில் விபத்திற்கு உள்ளாதல் அல்லது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளல், தற்கொலை செய்து கொள்ளல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பொருந்தாதவை ஆகும்.

4. மேலும் அணு தாக்குதலான யுத்தத்தினாலோ அல்லது வேறு இடற்பாடுகளாலோ ஒரு மொத்த பிரிவினர் பாதிக்கப்பட்டாலும் இத்திட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

5. மரணமடைந்த தொழிலாளியை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைத்தாலோ அல்லது எரித்தாலோ அவரது குடும்பத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிவாரண உதவித் தொகை வழங்கிட இயலாது.

நிதி உதவி கோர தகுதி பெற்றவர்கள்:

1. இறந்து போனவரின் மனைவி / கணவன்

2. இறந்தவரின் திருமணமாகாத மூத்த மகன் அல்லது மூத்த மகள்

(மைனராக இருப்பின் அவர்களது பாதுகாவலர்)

3. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த தாய் / தந்தை

4. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த மூத்த பேரன் அல்லது மூத்த பேத்தி

5. இறந்துபோனவரைச் சார்ந்து அவருடன் வாழ்ந்தவர்களில் வயதில் மூத்தவர் வாரிசுதாரர்களை பொருத்தவரையில் அவர்கள் சிறுவர்களாகவோ, சிறுமியர்களாகவோ இருந்தால் அத்தொகையை அவர்களது பெயரில் உரிய வயது நிரம்பும் வரை (18 வயதாகும்வரை) சேமிப்பு கணக்கில் வைக்க வேண்டும்.

(அரசு கடித எண் 27512 / எஸ்1/90-2/ வருவாய்த்துறை நாள்:9.3.90)
விண்ணப்பிக்க வேண்டிய முறை

1. மரணமடைந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை நேரடியகாக தனி வட்டாட்சியருக்கு அனுப்பிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களோ சரக வருவாய் ஆய்வர்களோ விண்ணப்பத்தினை பெறக்கூடாது.

2.மரணமடைந்த நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால் மேலும் ஓராண்டுக்குள் காலதாமதமாக விண்ணப்பித்தால் காலதாமதத்திற்கான காரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் தாமதத்தை மாவட்ட ஆட்சியர் பிழை பொறுத்து ஆணையிடலாம்.

3.விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. (அரசு கடித எண் 45042/ எஸ்1/92-3 வருவாய்த்துறை நாள்:9.7.92)

4.வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து தொழில் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் போது இம்மாநிலத்தில் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கக் கூடாது.(அரசு கடித எண் 6375 / எஸ்1/ 91-6 வருவாய்த்துறை நாள்:6.2.92)

5. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆண்டு வருமானத்திற்கு வரைமுறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. (அரசு கடித எண் 81266 நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதித்துறை நாள்:12.7.89)

விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

1.அசல் இறப்பு சான்று

2.குடும்ப அட்டை செராக்ஸ் நகல்

3.வருமான சான்று

4.பாஸ்போர்ட் அளவு விண்ணப்பதாரரின் போட்டோ -3

5.பிரேத பரிசோதனை அறிக்கை

6.முதல் தகவல் அறிக்கை 

7.விபத்தினால் பாதிக்கப்பட்டதற்கான அரசு சிறப்பு மருத்துவரால் அளிக்கப்பட்ட ஊனச்சான்று.

விசாரணை செய்ய வேண்டிய முறை:

1) விண்ணப்பம் பெறப்பட்டவுடன் தாலுக்கா பதிவேட்டில் பதிந்து விசாரணைக்கு சரக வருவாய் ஆய்வருக்கு அனுப்ப வேண்டும்.

2) விண்ணப்பத்தின் முதுநிலை வரிசை எண் விவரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

3) சரக வருவாய் ஆய்வர் விண்ணப்பத்தினை 30 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கையினை அனுப்பிட வேண்டும். விண்ணப்பதாரர், கிராம நிர்வாக  அலுவலர், விபத்துக்குள்ளான நபர் குடியிருந்து வரும் இடத்திலுள்ள இருநபர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்/ உறுப்பினர் ஆகியோரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெறப்பட வேண்டும். இறந்துபோனவர் தொழிலில் ஈடுபட்டிருந்தது குறித்தும் விபத்து நேர்ந்த விதம் குறித்தும் இந்த விபத்தின் போது உடனிருந்தவர்கள் அல்லது பார்த்துவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட வேண்டும். யாருக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான குறிப்புரையுடன் பரிந்துரை செய்திட வேண்டும்.

4) சரக வருவாய் ஆய்வர்களிடமிருந்து வரப்பெற்ற விசாரணை மனுக்களில் 10 சதவிகித மனுக்களை நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் நேரடியாக தல விசாரணை செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை முடிவு செய்தலில் இதற்கென நியமிக்கப்பட்ட நலிந்தோர் நல உதவி திட்ட தனி வட்டாட்சியர்களின் தீர்வே இறுதியானது. இது தொடர்பான மேல் முறையீடுகள் எதுவும் ஏற்க முடியாது.

(அரசு கடித எண்.104043/எஸ்1/91-5 வருவாய்த்துறை நாள்:18.5.92)

இடி,மின்னல் தாக்கி இறப்பவர்களுடைய வாரிசு தாரர்களுக்கு விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட இயலாது.(அரசு கடித எண்.55109/90-4 வருவாய்த்துறை)

ரயில்மோதி இறந்து போனதற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட இயலாது. (அரசு கடித எண்1099/99-4 வருவாய்த்துறை நாள்:7.12.99)

அரசாணை எண் 139 வருவாய்த்துறை நாள்:29.1.91ல் தெரிவிக்கப்பட்டவாறு பணியில் இருக்கும் போது பாம்பு போன்ற விஷமுள்ள பிராணிகள் கடித்தும், நீரில் முழ்குதல், தீ விபத்து இவற்றால் மரணமுறும் இனங்களுக்கு 29.1.91 முதல் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கிடலாம், ஆனால் தானே காணம் உண்டாக்கி கொள்ளுதல் / தற்கொலை மூலம் மரணம் ஆகியவை இவ்வினத்தின் கீழ் பொருந்தாது.

பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் கடித்து மரணமடைந்தவர்கள் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கு காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தவறாது தாக்கல் செய்ய வேண்டும். (அரசாணை நிலை எண் 673 வருவாய்த்துறை நாள்:2.12.99)

பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகும் போது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல திட்டம் 1994ன் படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திலிருந்து நிதி உதவிப்பெற வழிவகை இருப்பதனால் பதிவு செய்து கொண்டுள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு விபதது நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட தேவையில்லை. (அரசு கடித எண் 58845/ ஐ /99-13 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள்:20.6.2000

000004. சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?✍✍✍

      இதனைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.



         சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து. உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்


     வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையொப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்துகொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் விதிவிலக்கு உண்டு)

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல் வரும்? 

நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை. இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏறவேண்டியிருக்கும்

Sunday, April 8, 2018

000003. சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிரிவு 114A –  கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்.

பிரிவு 119 -  ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.

 கேள்வி:

சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல் துறையினர் மறுக்கலாமா?

பதில்:

எவ்வகையான புகாரையும் காவல்துறையினர் பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது.  புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம்.

கேள்வி:
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளை - நிஜத்தில் காவல் துறை செய்கிறதா? அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

பதில்:

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும். இவற்றில் சில முக்கிய விஷயங்கள், அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

SC & ST (Prevention of Atrocities) Act, படி, ஒரு புகார் மீது ஒரு காவல் அதிகாரி வழக்கு பதிய செய்ய தவறினால், இந்த சட்டப்படி, அவரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாவார். குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 2013 இல் ஏற்பட்ட amendment படி, புலனாய்வு அதிகாரி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166-A இன் படியும் தண்டிக்கப்பட கூடியவர் ஆகிறார்.

166A. ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு, சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாதிருக்கின்ற பொது ஊழியர்:—
ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமளிருப்பதால், எவருக்கேனும் கேடு விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக கேடு விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறைக்கான சட்டத்தின் ஆணை எதற்கும் அறிந்தே கீழ்படியாமலிருந்தால்….அவர் மீது நீதி மன்றதில் வழக்கு தொடரலாம்..!!

000002. வழக்கறிஞர் இல்லாமல் சட்ட புத்தகத்தை கொண்டு வழக்கை நடத்தலாமா?

 கேள்வி:

வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர் வித்தியாசம் என்ன? வேலைகள் என்ன? தனி மனிதன் ஒருவனே சட்ட புத்தகத்தை கொண்டு வழக்கை நடத்தலாமா வழக்கறிஞர் இல்லாமல்? தமிழ் படங்களில் வரும்படி தான் நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுமா? நீதிபதியின் உரை தமிழில் இருக்குமா இல்லை ஆங்கிலத்தில் இருக்குமா?

பதில் :

தனி மனிதர் வழக்கு நடத்தலாம், உங்களுக்கு நீதிமன்ற நடைமுறை, சட்டம் தெரிந்திருந்தால்.
 
தமிழ் படத்தில் வருவது போல இருக்காது. நேரில் ஒரு முறை போய் பாருங்கள். வழக்கறிஞர் நீதிபதிக்கு கேட்பது போல மட்டுமே பேசுவார். ஒவ்வொருவர் சத்தமாக பேசுவார்கள்.

நீதிபதி பேசாமல்தான் அமர்ந்திருப்பார். தேவைப்படும்போது தமிழில், சில நேரம் ஆங்கிலத்தில் பேசுவார்.
 
குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், இன்னும் பல நீதிமன்றங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். நேரில் நீங்கள் சென்று பார்க்கலாம், கிரிமினல் நீதிமன்றம் தவிர

கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அங்கி அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர்

 கேள்வி:

நீதிமன்ற நடைமுறை சட்டம் தெரிந்திருந்தால் ஒவொரு தனிமனிதனும் வாதாட முடியும் என்றால், எந்த தனிமனிதனாவது தன்னுடைய பிரச்சினைக்கு உண்டான வழக்கை தானே நடத்திய சரித்திரம் உண்டா? வழக்கறிஞர் படிப்புக்காக நேரத்தை வீனடிக்காமல், நீதிமன்ற நடைமுறை சட்டத்தை பொதுமக்கள் ...See More

பதில் :

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com. B.L அவர்களின் புத்தககங்கள் எளிமையாக உள்ளது.

தேவையான புத்தகங்கள்.
1. இந்திய தண்டனைச் சட்டம்
2. குற்ற விசாரணை முறைச் சட்டம்
3. இந்திய சாட்சிய சட்டம்
4. இந்திய அரசியல் சாசனம்
5. தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005.
6. உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்.

அனைத்து சட்டங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எது பற்றிய சட்டம் தேவையோ ? அதை மட்டும் படியுங்கள்.

Saturday, March 24, 2018

000001. தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யும்வழிமுறைகள்

வீட்டில் நமக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள், நாம் விரும்புவது வேறு பெயராக இருக்கும். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு போவோரும் உண்டு. பெற்றோர் வைத்த பெயரை சிலர் மாற்ற நினைப்பதும் உண்டு. மேலும், ஒருவர் தன் பெயரை எண்கணித முறையிலோ, ஜாதகப் படியோ அல்லது பிடித்த ஒரு நல்ல தமிழ்ப்பெயரையோ சூட்டிக் கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்கு என்ன வழிமுறைகள், தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள் என்ன?

தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்ர்க்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், பதிவுபெற்ற ஒரு மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப்பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் நகல் ஒன்று இணைக்க வேண்டும். பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் வயதுச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் வண்ணபுகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, அதில் தமிழக அல்லது மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவுஅலுவலர்கள் அல்லது சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலங்களில் பிறந்து, தமிழ்நாட்டில் தற்போது வசித்துவருபவர்கள், அவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருவதற்குஆதாரமாக அல்லது கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாளஅட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது வட்டாட்சியர்அவர்களிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

ஏதேனும் குழந்தை தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர்மாற்றம் செய்பவர்கள் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலைஇணைக்க வேண்டும்.

திருமணமாகி விவாகரத்துச் செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்பவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் கடந்த 9-2-2004 முதல் ரூ.415மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல்கட்டணம் ரூ.65.

எப்படிச் செலுத்த வேண்டும்?

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையும் பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலமாகவும் செலுத்தலாம்

உதவி இயக்குநர் (வெளியீடுகள்) அவர்கள்,

எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,

சென்னை-600 002

என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்..

மணியார்டர் மற்றும் போஸ்டல் ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் முக்கியமாக கவனிக்கவேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அந்த இதழ் வெளியான நாளில் இருந்து அவற்றை ஆறுமாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக் கோருபவர்களின் எந்தவிதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை விண்ணப்பதாரர்கள் உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெஜட்டெடு அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட மாட்டாது.

மிக முக்கியமாக இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அரசு இதழை எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பதாரர் முகவரிக்கு அனுப்பப்படுகின்ற அரசிதழ்கள்,  ஏதோ ஒரு காரணத்தினால், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில்,அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு ம்றுபடியும் தபால் மூலம்அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில்,விண்ணப்பதாரர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கானஅரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன் கீழ்கண்டவற்றை மனதில் கொள்க.

சுவீகாரம் தொடர்பாக சுவீகாரம் எடுக்கப்பட்ட குழந்தையின் பெயர்மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை அல்லது தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். ஒருவேளை விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.

பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிடவேண்டும்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர்மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை அல்லது தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன் அல்லது மகளின் சுவீகாரத் தந்தை அல்லது தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதைஅரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை  நகல் இணைக்கப்பட வேண்டும்